தெலுங்கானா மாநில சினிமா விருதுகள்: நேரில் விருது பெற்ற அல்லு அர்ஜுன் | அப்பாவை அப்படி பார்த்தது மகிழ்ச்சி: கீர்த்திபாண்டியன் நெகிழ்ச்சி | கவிஞர்.நா.முத்துக்குமார் இசைச்கச்சேரி: கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் பங்கேற்பு | மணிரத்னத்தை மறுத்தாரா ரஜினி? | விரைவில் இயக்குனராகும் பார்த்திபன் மகன் ராதாகிருஷ்ணன் | தயாராகிறார் அடுத்த கேப்டன் | நட்பு வட்டார படங்களில் நடிப்பு: புலம்பும் நடிகை | கலையும் கருணையும்... அருண்மொழி தேவன் | நடிப்பு, பாட்மின்டன் ஸ்ரீசுவேதா-வின் விருப்பங்கள் | காதோடு தான் பேசுவேன்...! குரலுக்கு ஒரு கோபிகா |
நடிகர் போண்டா மணி உயிருக்கு போராடுகிறார். அவருக்கு உதவுங்கள் என நடிகர் பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
தமிழில் 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி வேடங்களில் நடித்தவர் போண்டா மணி. இலங்கையை சேர்ந்த இவர் 'பவுனு பவுனுதான்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து சிறிய கதாபாத்திரம் தொடங்கி காமெடி நடிகராக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார்.
போண்டாமணி உடல்நலம் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இந்நிலையில் மீண்டும் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை பற்றி பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்த பெஞ்சமின் கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், ‛‛அண்ணன் போன்டா மணிக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டது. சென்னை ஓமந்துரார் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். இந்த வீடியோவை பார்ப்பவர்கள் அவரின் மேல்சிகிச்சைக்கு உதவும் படி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து யாராவது அவருக்கு உதவுங்கள். இலங்கையில் இருந்து வந்து தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்து சினிமா நடிகரானவர். எவ்வளவோ போராட்டத்திற்கு மத்தியில் கல்யாணம் செய்து, இரண்டு குழந்தைகளையும் படிக்க வச்சு, ஆளாகிட்டு இருக்கார். தயவு செய்து அவரை காப்பாத்துங்க நண்பர்களே. அனாதையாக இந்தியாவுக்கு வந்தார். அவர் குழந்தைகளை அனாதையாக போகக்கூடாது. முடிஞ்சதை செய்வோம். உதவுங்க'' என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.