படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

ஜம்மு காஷ்மீரில் ஏராளமான தியேட்டர்கள் செயல்பட்டு வந்தன. தீவிரவாதிகளின் தாக்குதல், பழமைவாதிகளின் எதிர்ப்பு காரணமாக அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. சில தியேட்டர்களை தீவிரவாதிகளிள் தாக்கி அழித்தனர். மீண்டும் அங்கு தியேட்டர் திறக்க நடந்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. 1999ம் ஆண்டு லால் சவுக் பகுதியில் ஒரு தியேட்டர் திறக்கபட்டடது அதனை தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்கினார். அதனால் அதுவும் கைவிடப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் தற்போது இயல்புநிலை திரும்பி உள்ளதால், சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில் அங்கு மீண்டும் திரையரங்குகள் திறக்கப்படுகிறது. புகழ்பெற்ற தியேட்டர் செயின் நிறுவனமான ஐநாக்ஸ் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து 5 திரைகள் கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்கை அமைத்துள்ளது. இவற்றில் ஒரே நேரதில் 522 பேர் படம் பார்க்கலாம். வருகிற அக்டோபர் 1ம் தேதி இந்த திரையரங்குகள் மக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
முதல் படமாக மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் மற்றும் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் ஹிந்தியில் உருவாகி உள்ள விக்ரம் வேதா ஆகிய படங்களை திரையிட உள்ளனர். இதற்கான டிக்கெட் முன்பதிவு வருகிற 26ம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.