ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தற்போது சுராஜ் இயக்கி உள்ள நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ள வடிவேலு, அதையடுத்து உதயநிதி நடித்துள்ள மாமன்னன், பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுக-2 ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்ற வடிவேலு, மீடியாக்களை சந்தித்துள்ளார்.
அப்போது, தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் ஹீரோவாகவும், மாமன்னனில் குணச்சித்திர வேடத்திலும், சந்திரமுகி-2வில் காமெடி வேடத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறேன். இந்த படங்களில் மக்கள் எதிர்பார்க்கும் காமெடிகள் இன்னும் அதிகமாக இருக்கும். அதோடு, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் பின்னணியும் பாடியிருக்கிறேன். அந்த பாடல் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெரும் என்று தெரிவித்திருக்கும் வடிவேலு, ஏற்கனவே என்னுடன் நடித்த நடிகர்களுக்கு ஏற்ற காமெடி டிராக் தற்போது இல்லாததால் மீண்டும் அவர்களுடன் சேர்ந்து நடிக்க இயலவில்லை. அதோடு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் போண்டா மணிக்கு கண்டிப்பாக என்னால் இயன்ற உதவி செய்வேன் என்றும் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.