பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

ஹாலிவுட் சினிமாவை இந்தியா நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தவர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இயக்கிய பாகுபலி, ஆர்ஆர்ஆர் படங்கள் உலக அளவில் வெற்றி பெற்று ஆயிரம் கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது. அடுத்து அவர் ஹாலிவுட் படம் இயக்க வாய்ப்பு வந்தபோதும் இந்திய படங்களை ஹாலிவுட்டுக்-கு கொண்டு செல்வதே என் இலக்கு என அறிவித்து தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். அடுத்து தனது கனவு படைப்பான மகாபாரத்தை 3 பாகங்களாக இயக்க இருக்கிறார்.
இந்த நிலையில் ராஜமவுலியுடன் ஹாலிவுட் நிறுவனம் ஒன்று கைகோர்த்திருக்கிறது. கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ் ஏஜென்சி (சிஏஏ) என்ற நிறுவனம் ஹாலிவுட் படங்களை உலகம் முழுக்க சந்தைப்படுத்தும் பணியை செய்து வருகிறது. இந்த நிறுவனம் ராஜமவுலியுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இனி ராஜமவுலி இயக்கும் படங்களை ஹாலிவுட் உள்ளிட்ட உலக சந்தைப்படுத்தும் பணியை இந்த நிறுவனம் செய்ய இருக்கிறது. மகேஷ் பாபு நடக்கும் படத்தில் இருந்து இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வருகிறது.