ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
தமிழ் சினிமாவே எதிர்பார்க்கும் ஒரு படம் ‛பொன்னியின் செல்வன்'. அமரர் கல்கியின் சரித்திர நாவலான பொன்னியின் செல்வனை இரண்டு பாகங்களாக படமாக இயக்கி, லைகா உடன் இணைந்து தயாரித்துள்ளார் மணிரத்னம். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, சரத்குமார் பார்த்திபன், ஐஸ்வர்ய லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, விக்ரம் பிரபு, பிரகாஷ் ராஜ், ஜெயராம், கிஷோர், ரகுமான் என ஏகப்பட்ட திரைநட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
முதல்பாகம் செப்.30ல் வெளியாக உள்ளது. இதற்காக பல்வேறு ஊர்களில் படக்குழுவினர் புரொமோஷன் பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த படம் சென்சாருக்கு சென்று வந்துள்ளது. படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யுஏ சான்று அளித்துள்ளனர். அதோடு படம் 2 மணிநேரம் 47 நிமிடம் ஓடும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.