தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது ‛‛திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்ததால் தான் இன்னமும் தமிழ்நாடு மதச்சார்பற்ற மாநிலமாக உள்ளது. தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கிறார்கள். ராஜராஜ சோழனை இந்துவாக அடையாள படுத்துகிறார்கள்'' என்றார். இவரது பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் பேரரசு இதுதொடர்பாக கூறுகையில், ‛‛ராஜராஜ சோழன் இந்து இல்லையென்றால் வேறு என்ன கிறிஸ்துவரா இல்ல இஸ்லாமியரா. உலகத்திலேயே இந்தியா சிறந்த நாடாக திகழ்கிறது. அதேபோல்தான் சைவம், வைணவம் உள்ளிட்ட அனைத்தும் இந்திய மதங்களும். இதையே இந்து என்றார்கள். உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள். நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை'' என்றார்.