மம்முட்டியை பற்றி தவறாக எதுவும் சொல்லவில்லை : பெண் தயாரிப்பாளர் விளக்கம் | ஸ்வேதா மேனனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த ரகுமான் | நடிகர் விஷ்ணுவர்தனின் நினைவிடம் இடிப்பு : சுதீப், ரிஷப் ஷெட்டி வருத்தம் | 65 ஆயிரம் கேட்ட பஹத் பாசிலுக்கு ஒரு லட்சம் கொடுத்தேன் : தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபன் | 'கேம் சேஞ்ஜர், ஹரிஹர வீர மல்லு' தோல்விகள் தரும் பாடம் என்ன? | தமிழ் சினிமாவின் 2025 வறட்சியை மாற்றுமா 'கூலி' | கதை பேசப்படணும், அதனல நடித்தேன் : காயல் பட அனுபவம் குறித்து அனுமோல் | இதுவரை நடித்திராத கேரக்டரில் சுனில் : கண் பார்வையற்றவராக நடிக்கும் ஹீரோ | முதல் நாள் சாதனை வசூலை நோக்கி 'கூலி' | அயோத்தி, பார்க்கிங், மகாராஜா, லப்பர் பந்து இயக்குனர்களின் அடுத்த படம்? |
அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கார் விருதுகள் உலக அளவில் சிறந்த திரைப்பட விருதுகளாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான விருதுகள் போட்டியில் சிறந்த வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பாக குஜராத்தி படமான 'செல்லோ ஷோ' தேர்வு செய்து அனுப்பப்படுகிறது.
தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் பலர் நடித்த 'ஆர்ஆர்ஆர்' படம் தேர்வாகாதது படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை அளித்தது. இருப்பினும் விருதுக்கான பொதுப் பிரிவுகளிலும் வெளிநாட்டுப் படங்கள் நேரடியாக கலந்து கொள்ள முடியும். அந்த விதத்தில் தற்போது சில பிரிவுகளில் 'ஆர்ஆர்ஆர்' படம் கலந்து கொள்கிறது.
“சிறந்த மோஷன் திரைப்படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர்கள், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒரிஜினல் திரைக்கதை, சிறந்த ஒரிஜினல் பாடல், சிறந்த ஒரிஜினல் இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த ஆடை அலங்காரம், சிறந்த மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல், சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ்” ஆகிய பிரிவுகளில் இப்படம் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.