இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு செலக்டிவ் ஆன படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்தவகையில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தி கிரேட் பாதர் என்கிற படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடித்திருந்தவர், தற்போது மீண்டும் மலையாளத்தில், மம்முட்டி நடித்து வரும் கிறிஸ்டோபர் என்கிற படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார். அமலாபால் மற்றும் ஐஸ்வர்ய லட்சுமி மற்ற இரு கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
இந்த படத்தில் நடித்தது குறித்து சினேகா கூறும்போது, “இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்.. என்ன விதமான கதாபாத்திரம் என என்னால் இப்போது சொல்ல முடியாவிட்டாலும் இரண்டுவித காலகட்டத்தில் இரண்டுவிதமான தோற்றங்களில் நடிக்கிறேன் என்பதை மட்டும் இப்போது சொல்ல முடியும். ஒரு நல்ல படத்தின் மூலம் மீண்டும் மலையாளத்திற்கு திரும்பி வரவேண்டும் என்று நான் காத்திருந்தேன். அந்த வாய்ப்பு இயக்குனர் பி.உன்னிகிருஷ்ணன் மூலமாக என்னை தேடி வந்தபோது மறுக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.