ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் உருவாக்கப்பட்ட பிரமாண்ட செட்டில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு 30 நாட்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் சோசியல் மீடியாவில் அது குறித்து ஒரு பதிவு போட்டிருக்கிறார் ஷாருக்கான்.
அதில், 'கடந்த 30 நாட்கள் என்ன ஒரு சிறப்பான அனுபவம். தலைவர் ரஜினிகாந்த் எங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசிர்வாதம் செய்தார். நயன்தாராவுடன் இணைந்து படம் பார்த்தேன். அனிருத்துடன் பார்ட்டி கொண்டாடினேன். விஜய் சேதுபதியுடன் நீண்ட உரையாடல். விஜய் சுவையான உணவு அளித்தார். இயக்குனர் அட்லி மற்றும் பிரியா ஆகியோரின் விருந்தோம்பலுக்கு நன்றி. தற்போது சிக்கன் 65 ரெசிபி சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும்' என்று பதிவு போட்டு இருக்கிறார் ஷாருக்கான்.
இதையடுத்து அவரது பதிவுக்கு இயக்குனர் அட்லி ஒரு பதில் கொடுத்து இருக்கிறார். அதில், 'மிக்க நன்றி சார். நீங்கள் சென்னை வந்தது குறித்து மிகவும் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். எனது சினிமா வாழ்க்கையில் சென்னையில் நடந்த இந்த படப்பிடிப்பு மறக்க முடியாத நிகழ்வு. சென்னையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுத்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். காரணம் இதன் மூலம் ஆயிரம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன. அதற்காக உங்களுக்கு தலை வணங்குகிறேன். உங்கள் மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளேன். லவ் யூ சார். விரைவில் உங்களை மும்பையில் சந்திக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார் இயக்குனர் அட்லி.