தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியருக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளது. நாங்கள் அம்மா, அப்பா ஆகிவிட்டோம் என விக்னேஷ் சிவன் மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவனும் இவர் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நீண்டநாள் காதலர்களாக வலம் வந்த இவர்கள் கடந்த ஜூன் 9ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். சென்னையில் உள்ள கடற்கரை ஒன்றில் பிரம்மாண்டமாய் இவர்களது திருமணம் நடந்தது. தொடர்ந்து ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று வந்தனர்.
இந்நிலையில் இந்த தம்பதியர் திடீரென தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறி குழந்தைகளின் பாதங்களில் முத்தமிட்டு மகிழும் போட்டோவை பகிர்ந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக விக்னேஷ் சிவன் வெளியிட்ட பதிவு : ‛‛நயன்தாராவும், நானும் அம்மா, அப்பாவாகிவிட்டோம். இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. பிரார்த்தனைகள், முன்னோர்களின் ஆசீர்வாதங்கள், நல்ல செயல்கள் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அனைவரின் ஆசீர்வாதமும் தேவை. உயிர் மற்றும் உலகம்'' என தெரிவித்துள்ளார்.
வாடகைத்தாய் மூலம் இந்த தம்பதியருக்கு குழந்தை பிறந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அதுபற்றி இருவரும் எதுவும் தெரிவிக்கவில்லை. ரசிகர்களும், திரையுலகினரும் நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.