இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழகத்தில் நம்மாழ்வார் போன்று கர்நாடகாவில் புகழ்பெற்ற இயற்கை விவசாயி சுபாஷ் பாலேகர். அவரது இயற்கை விவசாய நுட்பம் ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பல ஆண்டுகளாக அரசாங்க ஆதரவைப் பெற்றுள்ளது. மஹாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் கேரளாவும் இதனை பின்பற்றி வருகிறது.
தற்போது சுபாஷ் பாலேகரின் வாழ்க்கை கன்னடத்தில் சினிமாவாக தயாராகிறது. இதில் சுபாஷ் பாலேகராக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். சுற்றுசூழல் ஆர்வலரான விஜய் ராம் இயக்குகிறார். பிரகாஷ்ராஜ் சுபாஷ் பாலேகரை குருவாக ஏற்று சென்னை மற்றும் பெங்களூரில் இயற்கை விவசாயம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.