ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் | கணவர் கிரிஷ் உடன் பிரிவா... : நடிகை சங்கீதா மறுப்பு | தீபாவளி மாதத்தில் வெளியாகும் அனிமேஷன் படம் |
தமிழகத்தில் நம்மாழ்வார் போன்று கர்நாடகாவில் புகழ்பெற்ற இயற்கை விவசாயி சுபாஷ் பாலேகர். அவரது இயற்கை விவசாய நுட்பம் ஆந்திரா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் பல ஆண்டுகளாக அரசாங்க ஆதரவைப் பெற்றுள்ளது. மஹாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் கேரளாவும் இதனை பின்பற்றி வருகிறது.
தற்போது சுபாஷ் பாலேகரின் வாழ்க்கை கன்னடத்தில் சினிமாவாக தயாராகிறது. இதில் சுபாஷ் பாலேகராக பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். சுற்றுசூழல் ஆர்வலரான விஜய் ராம் இயக்குகிறார். பிரகாஷ்ராஜ் சுபாஷ் பாலேகரை குருவாக ஏற்று சென்னை மற்றும் பெங்களூரில் இயற்கை விவசாயம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.