தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

இந்தியாவில் அறிமுகமான ஆன்லைன் சூதாட்ட செயலியால் ஏராளமானோர் ஏமாந்து, பணத்தை இழந்து தற்கொலை செய்தனர். இதனால் இதற்கு எதிரான கடும் நடவடிக்கைகளை மத்திய அரசு கொண்டு வந்தது. சட்டவிரோத சூதாட்ட செயலிகளுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு அளிப்போர் மீது நடவடிக்கை எடுக்கும்படி நுகர்வோர் துறை அமைச்சகம் உத்தரவிட்டு இருந்தது.
அந்த அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் அதனை விளம்பரம் செய்த பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி உள்ளிட்ட 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.
இந்நிலையில் பிரகாஷ்ராஜ் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேற்று ஆஜரானார். விசாரணைக்கு பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது "சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்ததற்காக எனக்கு ஒரு பைசா கூட கிடைக்கவில்லை. இனி இதுபோன்ற ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடிக்க மாட்டேன். நான் கூறிய தகவல்களை பதிவு செய்து கொண்டனர். என்னை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைக்கவில்லை" என்றார்.