இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை ரகுல் பிரீத் சிங். அடுத்ததாக அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தமிழில் படங்களில் நடிக்காமல் இருந்த ரகுல் பிரீத் சிங் இந்தியன்-2 படத்தில் கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
அதேசமயம் தெலுங்கிலும் கூட மிகப்பெரிய இடைவெளி விட்டுள்ள ரகுல் பிரீத் சிங் தொடர்ந்து பாலிவுட்டில் மட்டும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல பிரபல தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானி என்பவரின் படங்களில் தொடர்ந்து நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் அவருடன் ரிலேஷன்ஷிப்பிலும் இருக்கிறார் என்பதும் ஏற்கனவே வெளியான செய்தி தான்.
இந்த நிலையில் பாலிவுட்டில் அடுத்ததாக எதிர்பார்க்கப்படுவது இவர்கள் இருவரின் திருமணம் தான். இதுகுறித்து அவர்கள் இருவரும் எதுவும் வாய் திறக்காத நிலையில், ரகுல் ப்ரீத் சிங்கின் சகோதரர் இதுபற்றி கூறும்போது, ‛‛எந்த ஒரு காதல் உறவுக்கும் இனிமையான முடிவு என்பது திருமணம் தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. 2023ல் அவர்கள் திருமணம் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் அது எப்போது என்பதை உரிய நேரம் வரும்போது ரகுல் பிரீத் சிங் தான் அறிவிப்பார்” என்று அவர் கூறியுள்ளார்.