கூலி : ஆந்திராவில் மட்டுமே டிக்கெட் கட்டண உயர்வுக்கு அரசு அனுமதி | ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்ந்த போனி கபூர் | அடுத்தடுத்து தோல்வி படங்கள் : கீர்த்தி சுரேசுக்கு ரிவால்வர் ரீட்டா கை கொடுக்குமா? | ‛சக்தித்திருமகன்' ரிலீஸ் தேதி மாற்றம் | திரையுலகில் 50 ஆண்டுகள் : ரஜினிகாந்த்துக்கு இபிஎஸ், உதயநிதி, பிரேமலதா வாழ்த்து | 'எக்ஸ்க்ளுசிவ் ஒப்பந்தம்' : 'வார் 2' செய்வது சரியா ? | கூலி படத்தில் ரஜினிக்கு ஜோடி கிடையாதா? | இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து |
நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதிகள் அண்மையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர்களாகினர். இதுகுறித்து சோஷியல் மீடியாக்களில் பலவித விவாதங்கள் எழுந்துள்ளது. வாடகைத்தாய் மூலம் குழந்தை பிறந்தது. ஆனால் அது உரிய சட்டமுறை விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா என விசாரணை கமிஷன் அளவுக்கு இந்த விஷயம் பேசு பொருளாகி உள்ளது. நயன்தாராவுக்கு ஆதரவாக பலரும் ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். குறிப்பாக நடிகை வனிதா சமீபத்தில் ‛‛பெற்றோர்களுக்கு தங்கள் அழகான குழந்தைகளின் பிறப்பை விட அழகான தருணம் என்ன இருக்க முடியும். ஒருவர் வாழ்க்கையின் மகிழ்வான தருணங்களை கெடுப்பவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். லீகல் தெரியும், மருத்துவம் தெரியுமென்று சில கோமாளிகள் பேட்டி கொடுப்பதும், ட்வீட் போடுவதும் நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா?'' என பதிவிட்டிருந்தார்.
அவரை போலவே நடிகை ரேஷ்மா பசுபலேட்டியும், 'இந்த உலகில் அடுத்தவர்களின் சந்தோஷத்தை பார்த்து சந்தோஷப்படுவபர்கள் இல்லாமல் போய்விட்டனர். குற்றம் சொல்வது, யூகித்துக் கொள்வது, அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி இன்பமடைவது இதுதான் தற்போது இந்த கொடூர உலகில் நடந்து கொண்டிருக்கிறது' என பதிவிட்டுள்ளார்.