2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் வரும் அக்டோபர் 21ம் தேதி வெளியாக உள்ள படம் 'சர்தார்'. இப்படத்தின் டிரைலர் இரு தினங்களுக்கு முன்பு வெளியானது. அதன்பின் இந்தப் படத்தைப் பற்றி அதிகமான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வர ஆரம்பித்தன. அதில் ஒருவர் 'சர்தார்' படத்தின் கதையும், அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் 'ஜவான்' படத்தின் கதையும் ஒன்றுதான், “அப்பா ரா ஏஜன்ட், மகன் போலீஸ்” என ஒரு பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவை பகிர்ந்து நக்கலாய் ஒரு கமெண்ட் அடித்துள்ளார் 'சர்தார்' படத்தின் எடிட்டர் ரூபன். “நமது பள்ளி நாட்களில் என்னைப் போன்று பலரும் ரஜினிகாந்த், விஜயகாந்த் ஆகிய இருவரும் 'காந்த்' என்பதால் அண்ணன், தம்பி என நினைத்திருப்போம். அதன் பிறகு நான் வளர்ந்துவிட்டேன். ஆனால், இன்னும் சிலர் அந்த குழந்தைப் பருவத்திலேயே இருக்கிறார்கள். இங்க 'ரா' ஏஜன்ட் வச்சிட்டு இஷ்டத்துக்கு ராவா அடிச்சி விடக் கூடாது,” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “படத்தோட கதை என்னன்னு நமக்கே இன்னும் தெரில, இவங்களுக்கு மட்டும் ஏழாவது அறிவு இருக்கும் போல…மோசமான ஸ்பை, ரா ஏஜென்ட்டா இருக்காங்க,” என கிண்டலடித்துள்ளார்.
அட்லீக்கு தமிழ் சினிமாவில் இதற்கு முன்பு வந்த கதைகளைத்தான் திரும்பவும் மாற்றி எடுப்பது பழக்கம். ஆனால், ஒரே சமயத்தில் தமிழில் எடுக்கப்பட்டுள்ள ஒரு கதையை அவர் ஏன் ஹிந்தியில் எடுக்கப் போகிறார்?.