அமெரிக்க முன்பதிவு : 'வார் 2'ஐ பின்னுக்குத் தள்ளி முந்தும் 'கூலி' | கமல் தயாரிப்பில் அண்ணன், தம்பி நடிப்பார்களா? | ரசிகர்களுடன் போட்டோ, விருந்து : தனுஷ் மாறியது ஏன் | மாளவிகா மோகனனின் பிறந்தநாளுக்கு போஸ்டர் வெளியிட்டு அசத்திய மும்மொழி பட குழுவினர் | 50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை |
தமிழ்த் திரைப்படங்கள் கடந்த பல வருடங்களாகவே உலக அளவில் வெளியாகி வருகின்றன. வெளிநாட்டில் படங்களை வெளியிடுவதைப் பற்றி 'எப்எம்எஸ்' என்று குறிப்பிட்டு அழைத்து வந்தனர். 'எப்எம்எஸ்' என்பதற்கு 'பாரின் மலேசியா சிங்கப்பூர்' என்று அர்த்தம். ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' படம் வெளிவருவதற்கு முன்பு வரை மலேசியா, சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகள்தான் வெளிநாடுகளில் தமிழ்ப் படங்களுக்கான அதிக வசூலைப் பெற்றுத் தரும் நாடுகளாக இருந்தது. அதற்குப் பிறகு இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இருந்தன. இப்போதும் பேச்சு வழக்கில் சினிமாத் துறையினர் 'எப்எம்எஸ்' என்று அழைத்தாலும் அது 'ஓவர்சீஸ்' என்று வளர்ந்துவிட்டது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு கம்ப்யூட்டர் துறையில் வேலைக்குச் சென்ற எண்ணற்ற தமிழர்கள், இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் ஆகியவர்களால் அமெரிக்காவில் தமிழ்த் திரைப்படங்களுக்கு கடந்த 15 வருடங்களாக நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. முன்னணி நடிகர்களின் படங்கள் தான் இதுவரையில் அதிக வசூலை அங்கு பெற்றுள்ளன.
அந்த விதத்தில் இதுவரையில் அமெரிக்காவில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் அதிக வசூலைப் பெற்றுள்ள படமாக மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படம் 50 கோடி வசூலைக் கடந்துள்ளது. 6 மில்லியன் யுஎஸ் டாலர்களை வசூலாகப் பெற்றுள்ளதாக படத்தை அங்கு வெளியிட்டுள்ள நிறுவனம் இரண்டு தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நேற்றைய வசூலுடன் சேர்த்தால் தற்போது 50 கோடி வசூலைக் கடந்துள்ளது.
இதற்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த '2.0' படம் அமெரிக்காவில் 5 மில்லியனுக்கும் சற்று குறைவான தொகையை, அப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் 35 கோடி வசூலித்து முதலிடத்தில் இருந்தது. இப்போதைய இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் 40 கோடி. எனவே, 50 கோடியைக் கடக்கவில்லை. முதல் முறையாக ஒரு வெளிநாட்டில் 50 கோடியைக் கடந்துள்ள முதல் படம் என்ற பெருமையை 'பொன்னியின் செல்வன்' பெற்றுள்ளது.