படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக மலையாளம், மற்றும் தமிழில் முக்கிய கதாபாத்திரங்களிலும் சில படங்களில் கதாநாயகியாகவும் நடித்து வருபவர் அஞ்சலி நாயர். மோகன்லால், ஜீத்து ஜோசப் கூட்டணியில் வெளியான திரிஷ்யம் 2 படத்தில் மோகன்லாலின் வீட்டிற்கு அருகிலேயே வசிக்கும் போலீஸ் உளவாளியாக நடித்திருந்தவர், இந்த அஞ்சலி நாயர் தான். அதுமட்டுமல்ல அண்ணாத்த திரைப்படத்தில் இளம் வயது ரஜினிகாந்திற்கு அம்மாவாக சிறப்பு தோற்றத்திலும் இவர் தான் நடித்திருந்தார்.
ஏற்கனவே திருமணமாகி இருந்த இவர் தனது முதல் கணவரை பிரிந்த நிலையில் இரண்டாவதாக கடந்த பிப்ரவரி மாதம் அஜித் ராஜூ என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இவருக்கு ஒரு மகள் உள்ள நிலையில் கடந்த ஜூலை மாதம் இன்னொரு பெண் குழந்தை பிறந்தது. தற்போது தான் நடித்த படம் ஒன்றுக்கு டப்பிங் பேசுவதற்காக தனது கைக்குழந்தையையும் தூக்கிக்கொண்டு வந்த அஞ்சலி நாயர் குழந்தையை தனது மடியில் கிடத்தியபடியே தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
இது குறித்த புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் அஞ்சலி நாயர். கைக்குழந்தையுடன் இருந்தாலும் தன்னால் படத்தின் பணிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக சிரத்தையுடன் அவர் டப்பிங் பேச வந்தது குறித்து நெட்டிசன்கள் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.