ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. படம் வெளிவந்து மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் தற்போதும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இத்தனைக்கும் தீபாவளி வெளியீடாக நேற்று 'சர்தார், ப்ரின்ஸ்' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இந்த இரண்டு படங்கள் கூட ஹவுஸ்புல் ஆகாமல் இருக்கின்றன. ஆனால், 'பொன்னியின் செல்வன்' பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆகி ஓடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய மூன்று தினங்களிலும் பல தியேட்டர்களில் இப்படம் 90 சதவீதம் வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களின் வசூல் சிறப்பாகவே இருப்பதால் படம் எப்படியும் 500 கோடியைக் கடந்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவிலும் படம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
'பிளாக் ஆடம்' ஆங்கிலப் படம் வந்ததால் சென்னையில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டர்களில் 'பொன்னியின் செல்வன்' படத்தைத் தூக்கிவிட்டார்கள். அவற்றிலும் படம் தொடர்ந்திருந்தால் நிச்சயம் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே முன்பதிவு செய்யப்பட்டு ஓடிக் கொண்டிருந்திருக்கும். அவற்றில் படம் இல்லாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.