தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் வெளிவந்த சரித்திரப் படம் 'பொன்னியின் செல்வன்'. படம் வெளிவந்து மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் தற்போதும் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. இத்தனைக்கும் தீபாவளி வெளியீடாக நேற்று 'சர்தார், ப்ரின்ஸ்' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. இந்த இரண்டு படங்கள் கூட ஹவுஸ்புல் ஆகாமல் இருக்கின்றன. ஆனால், 'பொன்னியின் செல்வன்' பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் ஆகி ஓடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இன்று, நாளை, நாளை மறுநாள் ஆகிய மூன்று தினங்களிலும் பல தியேட்டர்களில் இப்படம் 90 சதவீதம் வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களின் வசூல் சிறப்பாகவே இருப்பதால் படம் எப்படியும் 500 கோடியைக் கடந்துவிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிராவிலும் படம் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
'பிளாக் ஆடம்' ஆங்கிலப் படம் வந்ததால் சென்னையில் உள்ள ஐமேக்ஸ் தியேட்டர்களில் 'பொன்னியின் செல்வன்' படத்தைத் தூக்கிவிட்டார்கள். அவற்றிலும் படம் தொடர்ந்திருந்தால் நிச்சயம் அரங்கு நிறைந்த காட்சிகளாகவே முன்பதிவு செய்யப்பட்டு ஓடிக் கொண்டிருந்திருக்கும். அவற்றில் படம் இல்லாதது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.