ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

பிரபல கிரிக்கெட் வீரரான தோனி தனது பெயரிலேயே தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருக்கிறார். இந்த நிறுவனத்தின் மூலம் இதற்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிய ஐபிஎல் போட்டிகளை மையமாகக் கொண்டு ரோர் ஆப் தி லயன் என்ற ஆவணப்படத்தை தயாரித்தவர், அதன் பிறகு வுமன்ஸ் டே அவுட் என்ற பெயரில் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு குறும்படத்தையும் தயாரித்தார்.
இந்த நிலையில் தற்போது அந்த நிறுவனம் தங்களது முதல் தமிழ் படத்தை தயாரிக்கப் போகிறது. இதற்கான கதையை தோனியின் மனைவியான சாக்ஷி தோனி எழுதி இருக்கிறார். அதர்வா - தி ஆர்ஜின் என்ற கிராபிக்ஸ் நாவலை எழுதிய ரமேஷ் தமிழ்மணி இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாக உள்ளது. இது மட்டுமின்றி அறிவியல் புனைவு கதைகள், குற்றவியல் நாடகங்கள், சஸ்பென்ஸ் திரில்லர், நகைச்சுவை என பல வகையான கதைகளும் கொண்ட திரைப்படங்களை தயாரிக்கவும் தற்போது திரைக்கதை ஆசிரியர்களுடன் தோனி எண்டர்டைய்ன்மென்ட் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருகிறது.