விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் |
செப்டம்பர் மாதத்தில் வெளியான இரண்டு படங்களான 'பொன்னியின் செல்வன், காந்தாரா' ஆகிய படங்கள் மொத்தமாக 700 கோடியை வசூலித்து சாதனை புரிந்துள்ளன. தமிழில் தயாரான 'பொன்னியின் செல்வன்' செப்டம்பர் 30ம் தேதி பான் இந்தியா படமாக வெளிவந்தது. அதே தினத்தில் கன்னடத்தில் தயாரான 'காந்தாரா' படம் வெளிவந்தது. வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் இந்தப் படம் மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானது.
200 கோடி செலவில் இரண்டு பாகங்களாக தயாரான 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகம் மட்டும் 500 கோடி வசூலைத் தொட உள்ளது. 15 கோடி செலவில் தயாரான 'காந்தாரா' 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 'காந்தாரா' படத்தின் வசூல் 'பொன்னியின் செல்வன்' வசூலை விட அதிகமாக இருக்கிறது. சொல்லப் போனால் 'பொன்னியின் செல்வன்' படத்தை விடவும் மற்ற மொழிகளில் 'காந்தாரா' படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளது.
தியேட்டர்களில் ஒன்றுக்கொன்று போட்டியிட்ட இரண்டு படங்களும் ஓடிடி வெளியீட்டிலும் மோத உள்ளன. இரண்டு படங்களும் அமேசான் ஓடிடி தளத்தில் நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களுக்கும் ஓடிடி தளத்திலும் போட்டியுடன் கூடிய அதிக வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.