தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய படம் 'கொன்றால் பாவம்'. அவருடன் சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோரும் நடிக்க உள்ளனர். தயாள் பத்மநாபன் இயக்குகிறார்.
1981-களில் நடக்கும் கிளாஸிக் கிரைம் த்ரில்லர் கதையான இந்த படம் கன்னடத்தில் வெளிவந்த 'கரால ராத்திரி' என்ற படத்தின் ரீமேக். இந்த படம் கன்னடத்தில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த துணை நடிகைக்கான கர்நாடக மாநில விருதுகளை பெற்றது. இந்த படத்தை இயக்கிய தயாள் பத்மநாபனே இப்போது தமிழிலும் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் வருகிற 1ம் தேதி ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்க இருக்கிறது.