2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் |

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய படம் 'கொன்றால் பாவம்'. அவருடன் சந்தோஷ் பிரதாப், ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா, ஜெயக்குமார், மீசை ராஜேந்திரன், சுப்ரமணியம் சிவா, இம்ரான், சென்றாயன், யாசர், கவிதா பாரதி, தங்கதுரை, கல்யாணி மாதவி ஆகியோரும் நடிக்க உள்ளனர். தயாள் பத்மநாபன் இயக்குகிறார்.
1981-களில் நடக்கும் கிளாஸிக் கிரைம் த்ரில்லர் கதையான இந்த படம் கன்னடத்தில் வெளிவந்த 'கரால ராத்திரி' என்ற படத்தின் ரீமேக். இந்த படம் கன்னடத்தில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த துணை நடிகைக்கான கர்நாடக மாநில விருதுகளை பெற்றது. இந்த படத்தை இயக்கிய தயாள் பத்மநாபனே இப்போது தமிழிலும் இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் வருகிற 1ம் தேதி ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்க இருக்கிறது.