ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

தமிழ் சினிமாவில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டும் அளவிற்கு ரசிகர்கள் சென்றார்கள் என்றால் அது நடிகை குஷ்புவுக்கு மட்டும் தான். அந்த அளவிற்கு 90களில் முன்னணி நடிகையாக தனது ஆதிக்கத்தை செலுத்தி வந்த குஷ்பு, பின்னர் நடிப்பிலிருந்து ஒதுங்கி சினிமாவில் தயாரிப்பு நிர்வாகத்தை மட்டும் கவனித்து வருகிறார். இன்னொரு பக்கம் தேசிய கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தையும் தொடர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் கிட்டத்தட்ட 34 வருடங்களாக தனது அறிமுகப்படமான தர்மத்தின் தலைவன் படத்திலிருந்து கடந்த வருடம் அண்ணாத்த படம் வரை தான் இணைந்து நடித்த, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ரஜினிகாந்துடன் மிக நெருக்கமான நட்பு பாராட்டி வருகிறார் குஷ்பு.
அந்தவகையில் இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேரில் சென்று சந்தித்துள்ளார் குஷ்பு. இந்த சந்திப்பிற்கு வேறு எந்த நோக்கம் இல்லை என்றும் இது சூப்பர் ஸ்டாருடன் சிரித்துப்பேசி ஒரு கோப்பை தேநீர் பருகிய ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு என்று குறிப்பிட்டுள்ள குஷ்பு, ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு, உங்களது பொன்னான நேரத்தை ஒதுக்கியதற்கு நன்றி.. நீங்கள் இப்போதும் பிரமிக்க வைக்கிறார்கள் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.