பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சூர்யா நடித்து, தயாரித்த ஜெய்பீம் படத்தில் போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்படும் இருளர் இளைஞனாக நடித்தவர் மணிகண்டன். அதற்கு முன்பு விக்ரம் வேதா, காலா படங்களில் நடித்திருந்தார். சில்லுகருப்பட்டி அந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடித்திருந்தார். ஜெய்பீம் வெற்றிக்கு பிறகும் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த மணிகண்டன் தற்போது புதிய படம் ஒன்றில் முதன் முறையாக நாயகனாக நடிக்கிறார்.
மணிகண்டனுடன் மீரா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் நடிக்கிறார்கள். ஜெயந்த் சேதுமாதவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். ஒரு இளைஞனுக்கு தூக்கத்தில் சத்தமா குறட்டை விடும் குறைபாடு இருந்தால் அவன் சந்திக்கும் பிரச்சினைகள் எப்படி இருக்கும் என்பதை காமெடியாக சொல்லும் படமாக உருவாகி வருகிறது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் நசரேத் பசிலியான், யுவராஜ் கணேசன், மகேஷ்ராஜ் பசிலியான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.