தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

நடிகர் மணிகண்டன், நடன இயக்குனர் மற்றும் நடிகர் சாண்டி ஆகிய இருவரும் தமிழக அரசின் கலைமாமணி விருதை சில தினங்களுக்கு முன்பு பெற்றனர். பல வருடங்களாக இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர். சினிமாவுக்கு வாய்ப்பு தேடி அலைந்த காலத்திலிருந்து தற்போது வரை அவர்களது நட்பு இனிதாய் தொடர்கிறது. இருவரும் ஒரே நாளில் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளனர்.
அது குறித்து மணிகண்டன் இன்ஸ்டா தளத்தில், “நாங்கள் ஒரே கனவின் விதைகளை இரண்டு வெவ்வேறு மண்ணில் விதைத்தோம். நாங்கள் ஒரே அளவிலிருந்து தொடங்கினோம். ஆனால் வெவ்வேறு பாதைகளில் நடந்தோம். நாங்கள் எங்கள் கனவில் வேரூன்றி நீண்ட தூரம் வந்துள்ளோம். இன்று நாங்கள் இந்த மேடையில் ஒன்றாக நிற்கிறோம்... வெற்றியின் ஒளியில் கலைமாமணி விருதைப் பகிர்ந்து கொண்டு எங்கள் பயணங்கள் வெவ்வேறு, ஆனால் இலக்கு ஒன்று. காலம் நமக்கு நினைவூட்டுகிறது ... நட்பு தூரத்தால் அல்லது போராட்டங்களால் மங்காது, அனைத்தின் மூலமாக…..” என்று தன்னம்பிக்கையாகப் பதிவிட்டுள்ளார்.
மணிகண்டன் தமிழ் சினிமாவில் சமீப காலமான நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து முன்னேறி வருகிறார். சாண்டி, நடன இயக்குனராகவும், நடிகராகவும் வளர்ந்து வருகிறார். 'கூலி' படத்தில் 'மோனிகா' பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். 'லோகா' படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார்.