தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர் சதானந்தன் ராஜ்யசபா உறுப்பினர் ஆனார். அவருக்காக, கண்ணூரில் புதிதாக அமைக்கப்பட்ட எம்.பி. அலுவலக திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: சதானந்தன் மாஸ்டர் அலுவலகம் விரைவில் மத்திய அமைச்சர் அலுவலகமாக மாற வாழ்த்துகிறேன். என்னை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, எனக்கு பதிலாக சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக நியமித்தால் மகிழ்ச்சி அடைவேன். இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும்.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய நான், லோக்சபா தேர்தலின் போது, மக்கள் அளித்த தீர்ப்பை அங்கீகரிக்கும் விதமாக என்னை கட்சி மேலிடம் மத்திய அமைச்சர் ஆக்கியிருக்கலாம். எனது திரைப்பட வாழ்க்கையை விட்டு விட்டு நான் ஒருபோதும் அமைச்சராக இருக்க விரும்பவில்லை. சமீபத்திய காலங்களில், எனது வருமானம் கணிசமாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.