தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் மலையாளத்தில் சூப்பர் உமன் கதை அம்சத்துடன் கூடிய 'லோகா சாப்டர் 1 ; சந்திரா' திரைப்படம் வெளியானது. கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்திருந்த படத்தில் கதாநாயகனாக 'பிரேமலு' புகழ் நடிகர் நஸ்லேன் நடித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் சமமாக இன்னொரு முக்கியமான வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடன இயக்குனர் சாண்டி நடித்திருந்தார். இவர் மலையாளத்தில் நடிக்கும் முதல் படம் இதுதான். அவரது முதல் படமே கிட்டத்தட்ட 200 கோடி வரை வசூலித்திருப்பதும் அவரது கதாபாத்திரத்திற்கு மலையாள ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதும் அவரை உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது.
இந்த கதாபாத்திரத்தில் நடித்தது குறித்து சமீபத்தில் சாண்டி கூறும்போது, “இந்த படத்தில என்னுடைய கதாபாத்திரம் நிஜமான ஒரு சைக்கோ போன்றது தான். இந்த படப்பிடிப்பில் நடிக்கும்போதெல்லாம் எனது வீட்டிற்கு செல்வதையே தவிர்த்தேன். வீட்டாருடன் போனில் பேசுவதைக் கூட தவிர்த்தேன். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் என்னை தொந்தரவு செய்தது. இதற்கு முன்பு லியோ படத்தில் நடித்தபோதும் அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரம் என்பதால் அப்போதும் இதேபோல தான் வீட்டிற்கு செல்லாமல் வீட்டாருடன் பேசாமல் அந்த படப்பிடிப்பில் நடித்தேன்” என்று கூறியுள்ளார்.