2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

மலையாளத்தில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு பஹத் பாசில் ஜோடியாக மஹேஷிண்டே பிரதிகாரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அபர்ணா பாலமுரளி. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த சூரரைப்போற்று திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்த பிறகு சினிமாவில் தனது எல்லையை விரிவாக்கி வருகிறார் அபர்ணா பாலமுரளி. அந்தவகையில் கன்னடத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கன்னட நடிகரும் இயக்குனருமான ராஜ் பி ஷெட்டி முதன் முறையாக மலையாளத்தில் நடிக்கும் படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார் அபர்ணா பாலமுரளி.
இந்த படத்திற்கு ருத்திரம் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. “கோடாரி மறந்துவிடும் மரம் மறக்காது” என்கிற இதன் டேக்லைனே இந்த படம் ஒரு ரிவெஞ்ச் திரில்லர் என்பதை பளிச்சென சொல்கிறது. இந்த படத்தை மலையாள இயக்குனர் ஜிஷோ லோன் ஆண்டனி என்பவர் இயக்குகிறார். மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் நான்கிலும் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2023ல் துவங்க இருக்கிறது என அபர்ணா பாலமுரளி தனது சோசியல் மீடியா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.