தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
டாப் ஹீரோயின்கள் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடும் காலம் இது. காரணம் 30 நாள் கால்ஷீட் கொடுத்து நடிக்கும் படத்திற்கு வாங்கும் சம்பளத்தில் பாதியை 3 நாள் ஆடும் குத்தாட்டத்துக்கு வாங்குவது தான். குறைந்த உழைப்பு, நிறைய சம்பளம் என்பதால் ஒரு சில நடிகைகள் தவிர மற்றவர்கள் குத்தாட்டத்துக்கு ரெடி.
இதில் பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஒரு படி முன்னால் இருக்கிறார். பாலிவுட்டில் பிசியாக இருந்தபோதும் இமேஜ் பார்க்காமல் சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கு ஜோடியாக நடித்தார். அதற்கு காரணம் அவருக்கு கொடுக்கப்பட்ட கணிசமான சம்பளம்.
ஊர்வசி இப்போது ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போடுவதில் அதிக அக்கறை காட்டி வருகிறார். ஏற்கெனவே சில படங்களில் குத்தாட்டம் போட்ட ஊர்வசி, தெலுங்கில் சிரஞ்சீவி நடித்து வரும் வால்டர் வீரய்யா படத்தில் குத்தாட்டம் போட இருக்கிறார். போயபதி இயக்கத்தில் ராம் பொத்தனேனி நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் ஆடி முடித்து விட்டார். மேலும் இரண்டு தெலுங்கு படங்களில் ஆட ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தமிழிலும் சில படங்களில் ஆடுவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.