சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்த படத்தில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் உட்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் பல இடங்களில் நடைபெற்று வந்த நிலையில், இதுவரை 50 சதவீதம் படப்பிடிப்பு நடைபெற்று விட்டதாக இயக்குனர் நெல்சன் ஒரு தகவல் கொடுத்து இருக்கிறார்.
அதோடு இதற்கு முன்பு தான் இயக்கிய படங்களை விட இந்த படத்தில் அதிரடியான ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், அந்த படங்களை விட இந்த படம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ள நெல்சன், இந்த ஜெயிலர் படத்தில் இதுவரை பார்த்திராத வித்தியாசமான ரஜினியை பார்க்கலாம் . அதேபோல் கதைக்களமும் வித்தியாசமாகவும் சீன் பை சீன் புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்க வகையிலும் திரைக்கதை அமைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். மேலும் ஜெயிலர் படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடுவதற்கு திட்டமிட்டு இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் இயக்குனர் நெல்சன்.