பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. சுகுமார் இயக்கிய இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைத்து இருந்தார். இப்படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது.
'புஸ்பா- தி ரூல்' என தலைப்பு வைக்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களாக தாமதமாகி வந்தன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க படக்குழு முடிவு செய்ததாலும், திரைக்கதை இன்னும் வலுவாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த தாமதம் என்கிறார்கள்.
இந்த நிலையில் புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தின் பாங்காக் பகுதியில் அடுத்த வாரம் துவங்க உள்ளதாம். பாங்காக்கை சுற்றியுள்ள அடர்ந்த காட்டு பகுதியில் படத்தின் படப்பிடிப்பு மூன்று வாரங்களுக்கு நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.