அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து |

மலையாள நடிகை பார்வதி நாயர். தமிழில் என்னை அறிந்தால், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் பார்வதி நாயரின் வீட்டில் இருந்து கைக்கடிகாரங்கள், லேப்டாப், செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் திருடு போயிருக்கின்றன. இது தொடர்பாக நடிகை பார்வதி நாயர் அவருடைய வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திரபோஸ் மீது நுங்கம்பாக்கம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் சுபாஷ் சந்திரபோஸ் நடிகை பார்வதி பற்றிய சில தகவல்களை வெளியிட்டார். இது சமூக வலைத்தளங்களில் வெளியானது, சில மீடியாக்களும் வெளியிட்டன. இந்த நிலையில் தன்னை பற்றி அவதூறு பரப்புகிறவர்கள் மீது சட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் என்று தனது வழக்கறிஞர் மூலம் பார்வதி நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.