படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வெளியான கன்னடத் திரைப்படம் 'காந்தாரா'. யாரும் எதிர்பார்க்காத விதத்தில் இந்தப் படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று இந்தியா முழுவதும் அதிக வசூலைக் குவித்துள்ளது.
கன்னடத்தில் படம் வெளியான இரண்டு வாரங்களுக்குப் பிறகுதான் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் மூன்று வாரங்களுக்குப் பிறகு மலையாள மொழியிலும் வெளிவந்தது. 350 கோடி வசூலைக் கடந்துள்ள இந்தப் படம் ஹிந்தியில் மட்டுமே சுமார் 75 கோடிக்கும் அதிகமான வசூலைக் குவித்துள்ளது. கர்நாடகாவில் 175 கோடி, தெலுங்கு மாநிலங்களில் 50 கோடி வசூலையும், வெளிநாடுகளில் 25 கோடி வசூலையும் கடந்துள்ளது. தமிழ், மலையாளத்தில் 20 கோடி வசூலை மட்டுமே பெற்றுள்ளது. அனைத்து மொழிகளிலும் தற்போதும் தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் படத்தை கர்நாடகாவில் தென் பகுதிகளில் பேசப்படும் 'துளு' மொழியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகாவின் தெற்குப் பகுதி, உடுப்பி ஆகிய இடங்களில் இம்மொழி பேசப்பட்டு வருகிறது. 'காந்தாரா' படத்தில் இடம் பெற்றுள்ள 'பஞ்சுருலி தெய்வம்' துளு மொழியில் பேசுவதாகத்தான் படத்திலும் குறிப்பிட்டிருந்தனர். உடுப்பி சார்ந்த மலைப் பிரதேசத்தில்தான் படத்தின் கதைக்களமும் அமைக்கப்பட்டிருந்தது. அம்மலைவாழ் மக்களின் வாழ்வியல் கதைதான் 'காந்தாரா'.