இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வந்த படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்த நிலையில், ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார் சமந்தா. இந்த பாடலின் மிகப்பெரிய வெற்றி சமந்தாவின் மார்க்கெட்டில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது புஷ்பா- 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனாவே நாயகியாக நடிக்கும் நிலையில், முதல் பாகத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிய சமந்தாவை மீண்டும் அணுகியபோது அவர் மறுத்து விட்டார். இதையடுத்து புஷ்பா -2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட தற்போது காஜல் அகர்வாலை அணுகி படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.