போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வந்த படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்த நிலையில், ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடி இருந்தார் சமந்தா. இந்த பாடலின் மிகப்பெரிய வெற்றி சமந்தாவின் மார்க்கெட்டில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது புஷ்பா- 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனாவே நாயகியாக நடிக்கும் நிலையில், முதல் பாகத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடிய சமந்தாவை மீண்டும் அணுகியபோது அவர் மறுத்து விட்டார். இதையடுத்து புஷ்பா -2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட தற்போது காஜல் அகர்வாலை அணுகி படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக டோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.