தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கன்னடத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் சினிமாவை தாண்டி, சமூகம், அரசியல் களத்திலும் பணியாற்றி வருகிறார். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் பெங்களுரு தொகுதில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். பிரகாஷ்ராஜின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரான நடிகர்கள் அவருடன் நடிக் க மறுப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது: என் அரசியல் கருத்துகளால், என்னுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள், இப்போது நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. என்னோடு நடிக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. ஆனால், என் அரசியல் நடவடிக்கைகளும், கருத்துக்களும் அவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் விலகுகிறார்கள். அவர்களின் (ஹீரோக்கள்) விலகலால் என் தொழில் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதில் வருத்தம் இல்லை. எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். பல நடிகர்கள் அமைதி காக்கிறார்கள். அவர்களைக் குறை சொல்ல விரும்பவில்லை. என்கிறார் பிரகாஷ்ராஜ்.