ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
கன்னடத்தை சேர்ந்த பிரகாஷ்ராஜ் சினிமாவை தாண்டி, சமூகம், அரசியல் களத்திலும் பணியாற்றி வருகிறார். கடந்த பார்லிமென்ட் தேர்தலில் பெங்களுரு தொகுதில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். தொடர்ந்து மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வருகிறார். பிரகாஷ்ராஜின் அரசியல் நிலைப்பாட்டுக்கு எதிரான நடிகர்கள் அவருடன் நடிக் க மறுப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறியிருப்பதாவது: என் அரசியல் கருத்துகளால், என்னுடன் சேர்ந்து பணியாற்றியவர்கள், இப்போது நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. என்னோடு நடிக்க வேண்டாம் என யாரும் சொல்லவில்லை. ஆனால், என் அரசியல் நடவடிக்கைகளும், கருத்துக்களும் அவர்களுக்குப் பயத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் விலகுகிறார்கள். அவர்களின் (ஹீரோக்கள்) விலகலால் என் தொழில் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதில் வருத்தம் இல்லை. எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறேன். பல நடிகர்கள் அமைதி காக்கிறார்கள். அவர்களைக் குறை சொல்ல விரும்பவில்லை. என்கிறார் பிரகாஷ்ராஜ்.