இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஹரி இயக்கிய யானை படத்தை அடுத்து தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும் அச்சம் என்பது இல்லையே என்ற படத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். இந்த நிலையில் நேற்று அவர் தனது 45வது பிறந்த நாளை சென்னையில் உள்ள உதவும் கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அதோடு அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கியதோடு தானும் மதிய உணவை அந்த குழந்தைகளுடன் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்திருக்கிறார் அருண் விஜய்.
மேலும் நேற்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் ரத்த தானமும் செய்திருக்கிறார் அருண் விஜய். அவர் மட்டுமின்றி அவரது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களும் அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் ரத்ததானம் செய்துள்ளார்கள். ஆதரவற்ற குழந்தைகளுடன் இணைந்து அருண் விஜய் பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.