படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் மணிரத்னம் இயக்கத்தில் திரைப்படமாக உருவாகி, அதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டது. இங்கே இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகமெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை வழங்கியுள்ளனர். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா மற்றும் வானதி கதாபாத்திரத்தில் நடித்த சோபிதா துலிபாலா ஆகியோர் சமீபத்தில் ஒன்று கூடி மீண்டும் தங்களது படப்பிடிப்பு கொண்டாட்டங்களை மீட்டெடுத்துள்ளனர்.
இதுகுறித்த இரண்டு புகைப்படங்களை சோபிதா துலிபாலா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் ஒரு புகைப்படத்தில் இந்த அனைவரின் முகங்கள் குளோசப்பிலும் இன்னொரு புகைப்படத்தில் இவர்கள் ஐந்து பேரின் ஒற்றை பாதங்கள் குளோசப்பிலும் இடம் பெற்றுள்ளன. இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் இந்த நிகழ்வில் எங்கே நந்தினியை காணவில்லை என்று ஐஸ்வர்யா ராய் பற்றியே தங்களது கமெண்டுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.