ஆண்கள் பார்வையில் வெளியான குடும்ப வன்முறை படம் ; கண் கலங்கிய நடிகர் பாலா | பாலகிருஷ்ணா பிறந்தநாளில் வெளியான ‛அகண்டா 2' அறிமுக டீசர் | தந்தையின் இறுதிச்சடங்கு.. ஸ்ட்ரெச்சரில் வந்த தாய் ; கதறியழுத வில்லன் நடிகர் | வெற்றிமாறனை சுற்றி வரும் வதந்திகள், பதில் சொல்வாரா ? | நயன்தாரா படத்தை தொடர்ந்து திலீப் படத்தை இயக்கும் வாரிசு நடிகர் | செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி |
ஒரே நாளில் வெளியான இரண்டு பிராந்திய மொழித் திரைப்படங்கள் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்திய சினிமாவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி தமிழில் வெளியான 'பொன்னியின் செல்வன்' படம் 500 கோடி வசூலைக் கடந்தது. அதே நாளில் வெளியான கன்னடப் படமான 'காந்தாரா' படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' படத்தின் பட்ஜெட்டோடு ஒப்பிடுகையில் 'காந்தாரா' படத்தின் வசூல் மிகப் பெரியது.
'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டு பாகங்களும் சேர்ந்து 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட் என்கிறார்கள். முதல் பாகத்திற்கான செலவு 100 கோடிக்கும் கூடுதலாக இருக்கலாம். அதே சமயம், 'காந்தாரா' படம் வெறும் 16 கோடி ரூபாய் செலவில் மட்டுமே எடுக்கப்பட்ட ஒரு படம் என்பது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவில் 170 கோடி, வட இந்தியாவில் 95 கோடி, தெலுங்கில் 60 கோடி, வெளிநாடுகளில் 45 கோடி, கேரளாவில் 20 கோடி, தமிழகத்தில் 12 கோடி என இப்படம் 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 'கேஜிஎப் 2' படத்திற்குப் பிறகு கன்னடப் படமான 'காந்தாரா' 400 கோடி வசூலைக் கடந்துள்ளது. இரண்டு படங்களுமே இந்த ஆண்டில் வெளிவந்தவை என்பது முக்கியமானது.
100 கோடி பட்ஜெட்டில் தயாரான 'கேஜிஎப் 2' படம் 1200 கோடி வரை வசூலித்தது என்கிறார்கள். இரண்டு படங்களின் லாபத்தையும் சேர்த்தால் 1500 கோடி வரும். இந்திய சினிமாவில் இந்த வருடத்தில் வேறு எந்த மொழிப் படங்களும் இப்படி ஒரு சாதனையைப் படைத்ததில்லை. இந்த இரண்டு கன்னடப் படங்களின் வசூல், லாபம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்துவிட்டது.