கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான பாகுபலி திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அதேசமயம் அந்த படம் அதிக நேரம் ஓடும் விதமாக எடுக்கப்பட்டிருந்ததால் படத்தின் நீளம் கருதி இரண்டு பாகங்களாக வெளியிடப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் கதை அந்தப்படத்துடன் முடிவடைந்துவிட்டது. இருந்தாலும் இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் எப்போது என பல நிகழ்வுகளில் இயக்குனர் ராஜமவுலியிடம் கேட்கப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கூட ராஜமவுலி கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் இதுபற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, இதைப்பற்றி என்னால் இப்போது எந்த தகவலும் சொல்ல முடியாது. என்னைவிட இந்த படத்தின் கதாசிரியரான எனது தந்தை விஜயேந்திர பிரசாத் சொன்னால் தான் சரியாக இருக்கும். அவர் தான் தற்போது அதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறார் என்று பதிலளித்தார்.
இந்த நிலையில் தற்போது கதாசிரியர் விஜயேந்திர பிரசாத் ஒரு வழியாக இந்த இரண்டாம் பாகத்திற்கான கதைக்களத்தை பிடித்து விட்டோம் என்று கூறியுள்ளதாக ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.. அந்தவகையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிறது என்கிற தகவலுடன் விரைவில் அது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கலாம்.