ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகில் உள்ள தனியார் பொழுதுபோக்கு பூங்காவில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்புக்கு யானைகள் கொண்டு வரப்பட்டது. அனுமதியின்றி யானைகளை நடிக்க வைப்பதாக வந்த தகவலை தொடர்ந்து தனியார் செய்தி தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று படப்பிடிப்பு நடக்கும் இடம் அருகே நின்று கொண்டு அங்குள்ள மக்களிடம் யானைகள் குறித்த நேர்காணல் செய்து வந்தனர்.
இந்த தகவலை அறிந்த விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்தி சேகரித்த பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். உடனடியாக அந்த இடத்துக்கு வந்த போலீசார் தாக்குதல் நடத்திய விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளை கைது செய்தனர். அதில் சிலர் தற்போது தலைமைறவாக உள்ளனர்.
படப்பிடிப்பை டிரோன் கேமரா மூலம் படம் பிடித்தனர் அதை நாங்கள் தடுத்தோம். அவர்கள் எங்களை தாக்கினார்கள் என்று விஜய் மன்ற நிர்வாகிகள் கூறுகிறார்கள். டிரோன் கேமரா பயன்படுத்தவில்லை. படப்பிடிப்பில் அனுமதி இன்றி யானைகள் பயன்படுத்தப்படுவதாக வந்த தகவலை உறுதி செய்யவே சென்றோம். மேலும் படப்பிடிப்பு தளத்தில் எந்த ஒரு காட்சியையும் நாங்கள் பதிவு செய்யவில்லை என்று சேனல் தரப்பு கூறியுள்ளது.