வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

அஜித்தை பொறுத்தவரை திரையுலகைச் சேர்ந்த எந்த விதமான விழாக்களிலும் கலந்து கொள்ள மாட்டார். அதேசமயம் தனது படப்பிடிப்பு இல்லாத நாட்களில் பைக் பயணம் தவிர, தனது குழந்தைகள் சம்பந்தமான நிகழ்ச்சி மற்றும் இளைஞர்களுக்கு ஊக்கம் தரும் நிகழ்ச்சி என செலக்டிவான சில நிகழ்வுகளில் மட்டும் கலந்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். அந்த சமயத்தில் தன்னை ரசிகர்களுடன் எந்த தயக்கமுமின்றி புகைப்படமும் எடுத்து கொள்கிறார். இந்த நிலையில் சென்னையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித்தை அவரை ஒரு ரசிகராக எதிர்பாராதவிதமாக சந்தித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.
நீண்ட நாளைக்கு பிறகு அஜித்தை சந்தித்துள்ளதாகவும் இந்த சந்திப்பு பல வருடங்களுக்கு மனதில் போற்றி பாதுகாக்க கூடிய ஒன்றாக இருக்கும் என்றும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். சோஷியல் மீடியாவில் எப்போதுமே அஜித் ரசிகர்களும் சிவகார்த்திகேயன் ரசிகர்களும் ஒற்றுமையாக இருப்பவர்கள் என்பதால் இருதரப்பு ரசிகர்களும் இந்த சந்திப்பை வரவேற்று கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். இதற்கு முன்னதாக அஜித் நடித்த ஏகன் படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




