ஜனவரி 22ல் மலையாள திரையுலகம் வேலை நிறுத்தம் | அமிதாப் பச்சனை பார்க்க ஷாப்பிங் மாலில் நடந்த தள்ளுமுள்ளுவில் கண்ணாடி உடைப்பு : ரசிகர்கள் காயம் | சஞ்சய் தத்தை உண்மையிலேயே ஏமாற்றியது லியோவா ? ராஜா சாப்பா ? | பொங்கல் வெளியீட்டில் குதித்த ‛வா வாத்தியார்' | பொங்கலுக்கு மேலும் சில படங்கள் ரிலீஸ் | தமிழில் தடுமாற்றத்தில் 'தி ராஜா சாப்' | 'பராசக்தி'யில் இருக்கும் 'புறநானூறு'.... | தி ராஜா சாப் : முதல் நாள் வசூல் ரூ.112 கோடி | தணிக்கையில் பிரச்னை... மாற்றம் வேண்டும் என்கிறார் கமல் | கருப்பான பெண்ணாக நடிக்கவும் கலரான பெண்ணையே தேர்வு செய்கிறார்கள்: பிரானா வருத்தம் |

குற்றப் பரம்பரை உள்ளிட்ட பல நூல்களை எழுதியவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. இவர் தமிழ் சினிமாவில் மதயானை கூட்டம், கொம்பன், ரஜினி முருகன், சேதுபதி, அண்ணாத்த உள்பட பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்திருக்கிறார். தற்போது திரிஷா நடித்து வரும் தி ரோடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது வலைதளத்தில் ஒரு எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளார் வேல ராமமூர்த்தி. அதில், தன்னுடைய பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு, அதன்மூலம் சிலர் பொதுமக்களிடத்தில் பணம் வசூலித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். என் பெயரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாஸ்ட்அப் மூலம் பணம் கேட்டு யாரேனும் வசூலித்தால் தயவு செய்து யாரும் அது போன்ற நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என அவர் தெரிவித்திருக்கிறார் வேல ராமமூர்த்தி.