இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமாவின் எவர் கிரீன் காமெடி நடிகர்களில் கவுண்டமணியும் ஒருவர். தொடர்ச்சியாக காமெடி வேடங்களில் நடித்தவர் ஒருக்கட்டத்தில் சினிமாவை விட்டு சற்று விலகியிருந்தார். நீண்ட இடைவெளிக்கு பின் சில ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, 49 ஓ ஆகிய படங்களில் கதையின் நாயகனாக நடித்தார். அதன்பிறகு சில படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தார். கடந்த 6 ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காதவர் தற்போது பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியராக நடிக்கப் போகிறார். இந்த படத்தை பேயை காணோம் என்ற படத்தை இயக்கிய செல்வ அன்பரசன் இயக்குகிறார். வருகிற ஜனவரி மாதத்தில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. முக்கியமாக, இந்த பழனிச்சாமி வாத்தியார் படத்தில் கவுண்டமணியுடன் தனுஷ் அல்லது சிவகார்த்திகேயனை கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பதற்கான முயற்சிகளும் நடக்கின்றன.