திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
எல்லா முன்னணி நடிகைகளையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த ஆண்டு முதலிடத்தை பிடித்திருக்கிறார் பொன்னியின் செல்வன் பூங்குழலி. அதாவது ஐஸ்வர்ய லட்சுமி. எதில் முதலிடம் தெரியுமா? அவர்தான் இந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர். அவர் நடித்த 9 படங்கள் இந்த ஆண்டு வெளிவந்திருக்கிறது. இது ஒரு சாதனை அளவாகும். கடந்த 5 ஆண்டுகளில் ஒரு நடிகை நடித்த 9 படம் வெளிவரவில்லை என்கிறார்கள்.
தமிழில் புத்தம்புது காலை விடியாதா, கார்கி, பொன்னியின் செல்வன், கேப்டன், கட்டா குஸ்தி படங்களும், மலையாளத்தில். அர்ச்சனா நாட் அவுட், குமாரி ஆகிய படங்களும், தெலுங்கில், அம்மு, கோட்சே என்ற படங்களும் அவர் நடித்து வெளியானது. இதில் கார்கி மற்றும் குமாரி படங்களை ஐஸ்வர்ய லட்சுமி தயாரித்திருந்தார். தற்போது பொன்னியின் செல்வன் 2ம் பாகம், மலையாளத்தில் கிறிஸ்டோபர், கிங்க ஆப் கோதா படங்களில் நடித்து வருகிறார்.