திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கங்கனா ரனவத். பாலிவுட் ஹீரோக்களைப் பற்றி கடுமையான கருத்துக்களுடன் விமர்சிக்கும் ஒரு தைரியமான நடிகை எனப் பெயரெடுத்தவர். பாலிவுட்டின் நெப்போட்டிசத்தை எதிர்த்து அதிகமாகக் குரல் கொடுத்த ஒரே நடிகை என்றும் சொல்லலாம்.
ஹிந்தியில் அவரது ஆரம்ப கால கட்டங்களிலேயே 2008ம் ஆண்டு தமிழில் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடித்து வெளிவந்த 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமானார். ஆனால், அந்தப் படம் பெரிய வெற்றியையும் பெறவில்லை, அவரையும் யாரும் கவனிக்கவில்லை. அதே வருடத்தில் ஹிந்தியில் வெளிவந்த 'பேஷன்' படம் மூலம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கடந்த வருடம் வெளிவந்த ஜெயலலிதாவின் பயோபிக் படம் என்று சொல்லப்பட்ட 'தலைவி' படத்தில் நடித்தார். அந்தப் படமும் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பைப் பெறவில்லை. இருந்தாலும் தமிழ் சினிமா மீதுள்ள ஆர்வத்தில் மூன்றாவது முறையாக 'சந்திரமுகி 2' படத்தின் மூலம் மீண்டும் வருகிறார். அது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. முதலிரண்டு படங்கள் அவருக்கு சிறப்பாக அமையாத நிலையில் 'சந்திரமுகி 2' கங்கனாவுக்கு கவனம் ஈர்க்கும் படமாக அமையுமா என்பது படம் வெளிவரும் போது தெரியும்.