ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா 'தசை அழற்சி' நோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையில் இருக்கிறார். தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக 'குஷி' என்ற படத்தில் நடித்து வருகிறார். சமந்தாவின் உடல்நிலை காரணமாக, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறாமல் இருக்கிறது.
இந்த நிலையில் சமந்தா தனது குணாதிசயங்கள் குறித்து அளித்துள்ள பேட்டியில், ‛எனக்கு கோபம் வரும்போதெல்லாம் ஜிம்முக்கு சென்று கண்டபடி உடற்பயிற்சி செய்வேன். உடனே கோபம் தணிந்து விடும். நான் பணம், பெயர் புகழுக்காக அலைய மாட்டேன். பணம் எனக்கு முக்கியம் இல்லை. நடிப்புதான் முக்கியம். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் நேசிக்கிறேன். செய்யும் வேலையை நேசிக்க முடியாதபோது அதில் எந்தவித சந்தோஷமோ அல்லது பிரயோஜனமோ இருக்காது. எனக்கு நானே பெரிய விமர்சகி.
நம் தவறுகளை நாம் தெரிந்து கொள்ளும்போதுதான் தொழிலில் முன்னேற முடியும். காலம் நமக்கு சாதகமாக இல்லாதபோது நமக்கு எதுவும் கைகூடாது. அந்த சமயத்தில் அதையே நினைத்து கவலைப்பட மாட்டேன். யோசிப்பதை விட்டுவிட்டு தூங்கி விடுவேன். உனக்கு பிடித்தது போலவே நீ இரு. நீ இந்த பூமியின் மீது வந்தது மற்றவர்களின் பாராட்டை பெறுவதற்கோ அல்லது மற்றவர்களை சந்தோஷப்படுத்துவதற்கோ அல்ல. நமக்கு இருப்பதையே நாம் இஷ்டப்பட ஆரம்பித்தால் தேவையானவை எல்லாம் நம்மை தேடி வரும்' எனக் கூறினார்.