ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில், கன்னடத்தில் வெளிவந்த 'காந்தாரா' படம் சுமார் 400 கோடி வசூலித்து பெரிய சாதனையைப் படைத்தது. வட கர்நாடகாவின் மலைப் பகுதிகளில் உள்ள மக்களின் கலாச்சாராம், அவர்களது பூத கோலா விழா நிகழ்வு, கிராமியக் கடவுள் வழிபாடு ஆகியவற்றை மையமாக வைத்து வெளியான அந்தப் படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.
பூத கோலா விழாவில் பஞ்சூர்லி நடன ஆராதனை நடைபெறுவதுதான் 'காந்தாரா' படத்தின் கிளைமாக்ஸ் காட்சியாக இடம் பெற்று ரசிகர்களைக் கவர்ந்தது. அப்படிப்பட்ட ஒரு திருவிழாவில் நடிகை அனுஷ்கா கலந்து கொண்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. வட கர்நாடகாவின் மங்களூர்ப் பகுதியைச் சேர்ந்தவர்தான் அனுஷ்கா. அவரது குடும்பத்தினருடன் அந்த திருவிழாவிற்கு அனுஷ்கா சென்றதும், பஞ்சூர்லி நடனத்தை அவர் வீடியோ எடுத்ததையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
'காந்தாரா' படத்திற்கப் பிறகு பூத கோலா, பஞ்சூர்லி உள்ளிட்ட வட கர்நாடகா பகுதி மக்களின் தெய்வ வழிபாட்டு முறை இந்தியா மட்டுமல்லாது உலக அளவிலும் பிரபலமாகி உள்ளது.