முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கே ஜி எப்-1 மற்றும் கே ஜி எப்- 2 ஆகிய இரண்டு படங்களும் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதன் காரணமாகவே கே ஜி எப் -3 படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. இந்நிலையில் தற்போது அது குறித்து அப் படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரங்கடூர் ஒரு அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில், கே ஜி எப் -3 படத்திற்கான கதை மற்றும் திரைக்கதையை பிரசாந்த் நீல் ஏற்கனவே தயார் செய்து விட்டார். அந்த கதையில் யஷின் இளமைக்காலம் மற்றும் பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெறும். தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த் நீல், அந்த படத்தை முடித்ததும் கேஜிஎப் படத்தின் மூன்றாம் பாகத்திற்கான பணிகளை தொடங்க இருக்கிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.