முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்துள்ள 'வாரிசு' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் ரசிகர்கள் இருக்கும் பக்கம் சென்று அவர்களுக்குக் கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் விஜய்.
நிகழ்ச்சியின் போது மேடை ஏறிய விஜய், மேடையிலிருந்தே அரங்கத்தைச் சுற்றி ரசிகர்களின் ஆர்ப்பரிப்புடன் ஒரு செல்பி வீடியோவை எடுத்தார். நேற்று நள்ளிரவில் அந்த வீடியோவை விஜய்யின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டது. “என் நெஞ்சில் குடியிருக்கும்” என்ற ஹேஷ்டேக்குடன் பதிவு செய்யப்பட்ட அந்த வீடியோ, சில மணி நேரங்களிலேயே 5 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
நேற்றைய விழாவில் விஜய் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். 'வாரிசு' படம் அவருக்கு முழு திருப்தியைத் தந்திருப்பதுதான் அதற்குக் காரணம் என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.