தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
துவாரகா புரொடக்ஷன் சார்பில், பிளேஸ் கண்ணன் மற்றும் ஸ்ரீலதா பிளேஸ் கண்ணன் தயாரிக்கும் படம் கொடுவா. நிதின்சத்யா நடிப்பில், சுரேஷ் சாத்தையா இயக்கத்தில், இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையின் பின்னணியில் உருவாகி வருகிறது. இராமநாதபுரம் மாவட்ட இறால் வளர்ப்பு பண்ணையில் வாழும் இளைஞன் அவனது காதல், குடும்பம், அவன் சந்திக்கும் பிரச்சனை, பழிவாங்கல் கதை களத்துடன் உருவாகியுள்ளது.
நிதின் சத்யா இராமநாதபுரம் இறால் பண்ணைகளில் பயிற்சி எடுத்துக் கொண்டு அந்த மண்ணைச் சேர்ந்த மனிதனாகவே மாறி நடித்துள்ளார். நடிகை சம்யுக்தா சண்முகநாதன் அவரது காதலியாக நடித்திருக்கிறார். அவரும் ராமநாதபுரத்து மீனவ பெண்ணாக நடித்திருக்கிறார்.
மாடலாக இருந்த சம்யுக்தா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாகியுள்ளார். இதற்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தில் அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளார். சமூக வலைத்ளத்தில் கவர்ச்சி படங்களை வெளியிட்டு வரும் சம்யுக்தாக இதில் மீனவ பெண்ணாகவே மாறி இருக்கிறார்.