ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் |

பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடித்து வரும் படம் சந்திரமுகி 2 . சந்திரமுகி படத்தில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது. இதில் முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடித்து வருகிறார். தலைவி படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில் இந்த படத்தில் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடித்து வருகிறார் கங்கனா.
சமீபகாலமாக அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்து அவ்வப்போது கருத்து சொல்லி வருவதால் அவர் சர்ச்சைகளிலும் சிக்கிக்கொண்டு வருகிறார். இதன் காரணமாக அவுட்டோர் படப்பிடிப்புகளுக்கு செல்லும்போது அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாக சந்திரமுகி -2 படப்பிடிப்பு தளத்திற்கு தனது மேக்கப் மேன்கள், காஸ்டியூமர்கள் மட்டுமின்றி துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் நான்கு பேர் அடங்கிய செக்யூரிட்டியுடன் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து செல்கிறார் கங்கனா. இதனால் அவர் சந்திரமுகி-2 படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் பரபரப்பு நிலவிக் கொண்டிருக்கிறது.